வெள்ளகோவிலில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு வகுப்பில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

Read Time:1 Minute, 49 Second

a8b8ae86-bbda-4c81-921d-9979b447defc_S_secvpfதிருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் துரை ராமசாமி நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கன்னியாகுமாரியை சேர்ந்த மரியலூயிஸ் (வயது 50) பணியாற்றி வருகிறார். இவர் 10–ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று சிறப்பு வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைப்பார்த்த அவரது அண்ணன் அதிர்ச்சியடைந்தார். என்ன? ஏது? என்று விசாரித்தபோது தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்பதாக கூறி அழுதார்.

தங்கையை சமதானப்படுத்திய அண்ணன் மற்றும் அவரது பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் விசாரணை நடத்தி காங்கயம் நீதிமன்றத்தில் மரியலூயிசை ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட மரியலூயிசை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே துறை ரீதியாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்தது.

எனவே திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மரியலூயிசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூரில் ஆண் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு கேமரா மூலம் தேடுதல் வேட்டை!!
Next post திருவள்ளூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!!