திருவள்ளூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!!

Read Time:1 Minute, 49 Second

2c7472f4-75b4-43b2-b6ba-930d5dddc0ac_S_secvpfதிருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அருகே உள்ள கல்லம்பேடு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி ரீட்டா(48) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

காணிக்கைராஜ் திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காணிக்கைராஜ் தனது மனைவி ரீட்டா, தாயார் அன்னம்மாள் (84) ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார். அவரது மகன் மற்றும் மகள் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 8 சவரன் தங்க நகைகளை திருடி உள்ளனர். மேலும் தூங்கி கொண்டிருந்த ரீட்டாவின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க நகைகளையும் மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து காணிக்கைராஜ் நேற்று மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளகோவிலில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு வகுப்பில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!
Next post தேர்தல்கள் ஆணையாளர் கட்சிகளின் செயலர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு!!