யாழ்- புலிகளால் அப்பாவிக் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Read Time:1 Minute, 59 Second

pistal2.gifயாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், குருநகரை வசிப்பிடமாகக் கொண்ட 48 வயதான சிங்கராயர் பேனார்ட் கிறிஸ்தோபர் என்பவரையே புலிகள் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிங்கராயர் பேனார்ட் கிறிஸ்தோபரது மனைவியையும் ஏற்கனவே புலிகள் சுட்டுக் கொன்றுள்ளதால், தற்போது அவர்களது இரண்டு பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.

மிகவும் வறுமை நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர், இந்தச் சைக்கிள் தரிப்பிடத்தில் வேலைக்குச் சேர்ந்து நான்காவது நாளே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
புலிகள் எத்தகைய காரண, காரியங்களுமின்றி அப்பாவிப் பொதுமக்களை சுட்டுக் கொல்வதையே தங்களது முழுநேர வேலையாகக் கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், அத்துவிச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் புலிகள் மேற்கொண்ட நான்காவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவெனவும் தெரியவருகிறது.

முதல்மூன்று புலிகளின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலுமொரு புளொட் உறுப்பினர் காயமடைந்தார். தற்போது அப்பாவிக் குடும்பதர் ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 45 பேர் பலி
Next post மும்பையில் 7 ரெயில் நிலையங்களில் தொடர் குண்டு வெடிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பலி