டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி மூவர் பலி!
Read Time:49 Second
கலேவெல – தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகினர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் மூவர் பலியாகினர்.
28 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மூவரே இவ்வாறு பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating