பணியின்போது போதையில் இருந்த அரசு டாக்டர்கள் கைது!!
மேகாலயா மாநிலத்தில் பணியின்போது குடிபோதையில் இருந்த அரசு டாக்டர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷில்லாங்கில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு ஒரு நோயாளி சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த இரண்டு டாக்டர்கள், அவருக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை வழங்காமல் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், டாக்டர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நோயாளியும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் டாக்டர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி சுகாதாரத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating