பீகாரில் ஆயுதங்கள் கடத்திய கும்பல் கைது!!
Read Time:1 Minute, 20 Second
பீகாரில் ஆயுதங்கள் கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்
பாட்னாவை அடுத்த சமஸ்திபூர் பகுதியில் ஆயுதக் கடத்தல் நடைபெற இருப்பதாக பீகார் போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முங்கரில் இருந்து சமஸ்திபூர் சென்ற ஒரு காரை போலீசார் இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரினுள் இரண்டு துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வன்முறைக் கும்பல்கள் சில, பல வருடங்களாக ஆயுதங்கள் பெற்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 5 பேருடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் குறித்து அறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating