பஸ் வராததால் பள்ளிக்கு வெயிலில் நடந்து சென்ற 15 மாணவ–மாணவிகள் மயக்கம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!
Read Time:1 Minute, 9 Second
பண்ருட்டி அருகே உள்ள சொர்ணாவூரை சேர்ந்த மாணவ – மாணவிகள் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பஸ்சில் சென்று வந்தார்கள். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக பஸ்கள் ஓடவில்லை.
சொர்ணாவூரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் 6 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை சொர்ணாவூரை சேர்ந்த மாணவ – மாணவிகள் சுப்புலட்சுமி, பிறைமதி உள்ளபட 15 பேர் பஸ் வராததால் கடும் வெயிலில் நடந்து சென்றனர். பாதி வழியில் அவர்கள் வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Average Rating