கணவரை அறையில் தள்ளி பூட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!!

Read Time:2 Minute, 12 Second

dbb3e09f-3f82-423c-bdb5-7dd9eec428e8_S_secvpfஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 30). இவர் அப்பகுதியில் நால்ரோட்டில் பேன்சி கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிபட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்த அயர்லின் ஜெயமோனா (23) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷாப்னி என்ற 1 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் லிவிங்ஸ்டனுக்கும், அயர்லின் ஜெயமோனாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரைக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அயர்லின் ஜெயமோனா, தனது கணவரை வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளி தாழ்பாள் போட்டார்.

பின்னர் அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி லிவிங்ஸ்டன் கதவை உடைத்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் உயிருக்கு போராடிய மனைவியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அயர்லின் ஜெயமோனா பரிதாபமாக இறந்தார்,

இதுகுறித்து பங்களா புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் விசாரணை நடத்தினார்.

மேலும் அயர்லின் ஜெயமோனாவுக்கு திருமணமாகி 3 வருடமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. கிருஷ்ணன் உன்னி, கோபி போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) முருகன் ஆகியோர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் வராததால் பள்ளிக்கு வெயிலில் நடந்து சென்ற 15 மாணவ–மாணவிகள் மயக்கம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!
Next post வேலூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!!