இரவு நேரத்தில் தனியாக வரச்சொல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் போனில் மிரட்டல்: இளம்பெண் தற்கொலை முயற்சி!!

Read Time:4 Minute, 25 Second

c4dec608-87d5-4b60-81e7-4ff11de4eae9_S_secvpfஸ்ரீரங்கம் மேலூர் மேலத் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து சில மாதங்களில் தனபால் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை மருமகன் மணிகண்டனுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். இதற்காக மணிகண்டன் ரூ.3 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தில் மணிகண்டன் செங்கற்சூளை வைத்து நடத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து கார்த்திகாதேவிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந் தேதி கார்த்திகா தேவி விஷம் குடித்துள்ளார். பின்னர் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய அவர் அதன் பிறகு பெற்றோர் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் தனபால் தனது ஒரு ஏக்கர் நிலத்தையும் திருப்பி தருமாறு மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அவர் திருப்பி தராமல் இழுத்தடித்ததால் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் தனபால் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர், தனபால் மற்றும் மணிகண்டனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ரூ.3 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்தால் நிலத்தை திருப்பி தருவதாக மணிகண்டன் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரூ.3 லட்சம் பணத்தையும் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந்தேதி தனபால், மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நிலத்தை திருப்பி கொடுக்கவில்லை. பின்னர் தனபால் போலீஸ் நிலையத்திற்கு சென்ற போது மணிகண்டனிற்கு ஆதரவாக போலீசார் பேசியதுடன் தனபால் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் டைப் ரைட்டிங் நிறுவனத்திற்கு படிக்க சென்ற கார்த்திகா தேவியை மணிகண்டனின் சகோதரர்கள் மிரட்டியதுடன் மணிகண்டன் காரில் கடத்தி செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு தனபால் வீட்டிற்கு செல்போனில் பேசிய இன்ஸ்பெக்டர், கார்திகா தேவியையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த கார்த்திகா தேவி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்த 30–க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு தென்னூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகா தேவி எழுதிய கடிதத்தில், தனது தந்தையின் சொத்தை கணவருக்கு எழுதி கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார். மேலும் இரவு நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்வதுடன், விசாரணைக்கு தனியாக வரசொல்கிறார். உன் அப்பாவையும், அண்ணனையும் ஜெயிலில் தள்ளுவேன் என்று மிரட்டுகிறார். என் சாவுக்கு இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்று கூறியுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!!
Next post ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கோவில் தெப்பக்குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை!!