சிதம்பரம் அருகே விடுதியில் தங்கி படித்த 6–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!
கடலூர் அருகே காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள்கள் சிவகாமி (வயது 12), ஆனந்தி (10). இவர்கள் இருவரும் சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் உண்டு–உறைவிட பள்ளியில் சேர்க்கப்பட்டு சிவகாமி 6–ம் வகுப்பும், ஆனந்தி 5–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் மற்ற மாணவிகள் தூங்கிய பின்னர் சிவகாமி மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இன்று காலை விழித்தெழுந்த மற்ற மாணவிகள் சிவகாமி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அலறினர்.
இதையடுத்து விடுதி காப்பாளர் இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
பள்ளி விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating