விபத்தில் மூவர் பலி – 10 பேர் காயம்!!
Read Time:1 Minute, 5 Second
மன்னார் – சிலாவத்துறை – கல்லாறு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற சிறு லொரி ஒன்று, வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் லொரி சாரதி உள்ளிட்ட 13 பேர் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் மூவர் பலியாகியுள்ளனர்.
லொரியின் அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating