சஜின்வாஸுக்கு சுவாசக் கோளாறு: ஆனாலும் பிணை இல்லை!!
Read Time:1 Minute, 7 Second
ஜனாதிபதி அலுவலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதால் பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் ஓகஸ்ட் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமது கட்சிக்காரர் மூன்று மாத காலமாக விளக்கமறியலில் இருப்பதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியபோதும் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கு மறுத்துள்ளது.
சட்டத்தரணியின் கருத்தை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என நீதவான் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்.
Average Rating