மஹிந்த போலிப் பிரச்சாரங்களை செய்கின்றார் – ரவி!!

Read Time:2 Minute, 7 Second

1741570145Raviமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தல் மேடைகளில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

நிதிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிதியமைச்சர் ஒருவரே தற்பொழுது பதவியில் இருப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

நாம் சுத்தமான நிர்வாகம் ஒன்றை நடத்திச் செல்கின்றோம் என்று அவரிடம் கூறிக் கொள்கின்றோம். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்த வேண்டாம்.

அதேபோல் நாட்டுக்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று தோல்வியாளர்களிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

நாங்கள் சுத்தமான அரசியல் செய்வதனால்தான் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு வௌியிடுவதில்லை.

தேவையேற்பட்டால் சிறிலிய வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் வௌியிடுவோம்.

கள்வர்கள் கள்வர்களை காப்பாற்றுவதற்காகவே அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றனர்.

அவர்கள் முயற்சிப்பது கெசினோ மற்றும் கஞ்சா உடன் கூடிய ஊழல் நிறைந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கே.

அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் எனத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன?
Next post இராணுவ வீரர்கள் கைதானமை குறித்து விசாரணை!!