இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்? – இலங்கை கடற்படை மறுப்பு!!

Read Time:1 Minute, 44 Second

743865973Navy11இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளார்.

இலங்கை கடற்படை எப்பெழுதும் பெறுப்புடனேயே செயற்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சேனக டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் போது அதற்கெதிராக இலங்கை கடற்படை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மூன்று இந்திய மீனவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட இலங்கை கடற்படையினர் அவர்களின் கைத்தொலைபேசிகளுக்கும் சேதம் விளைவித்திருந்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்ததாக வெளியிடப்பட்ட செய்திக்கு பதிலளிக்கும் போதே இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!
Next post கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுகுவோம் – ACJU!!