வௌ்ளை பட்டி அணிந்து திருடியவர்களை பிடிப்பது கடினம்!!!

Read Time:1 Minute, 37 Second

1587859345496989278harsha-2-lவெள்ளை கழுத்துபட்டிகளை அணிந்தவர்கள் மிகவும் சூட்சமமான முறையில் மோசடி செய்துள்ளதால் போதைப் பொருள் விற்பனையாளர்களை போன்று அவர்களை பிடிக்க முடியாது என பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கும், மக்களுக்கு அபிவிருத்தி என காண்பித்து ராஜபக்ஷவின் நட்பு சார்ந்த முதலாளித்துவ கொள்கையை முன்னெடுத்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அரச துறையை நண்பர்களிடம் ஒப்படைத்தனர். தனியார் துறையை போலி வர்த்தகர்கள் சிலரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையும் வியாபாரமும் மிகவும் சூட்சமமான முறையில் முன்னெடுக்கப்பட்டன.

வங்கிகளில் இருந்த சாதாரண மக்களின் பணம் உரிய நடைமுறைகள் இன்றி பயனற்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. சில முறைகேடுகள் குறித்து தேடி அறிய சர்வதேச பொலிஸாரின் உதவியையும் பெற வேண்டியுள்ளது எனவும் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநெல்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!
Next post சயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு!!