பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கால் டாக்ஸி ஓட்டுநர் கைது!!
கொல்கத்தாவில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை அளித்து தலைமறைவான பிரபல கால் டாக்ஸி நிறுவனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ஷியாமளா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த 8 ஆம் தேதி பணி முடிந்த பின்பு, நள்ளிரவில் கால் டாக்ஸி மூலம் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் ஓட்டுநர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கால் டாக்ஸி நிறுவனத்திடம் இது குறித்து புகார் அளித்திருந்தார்.
பெண் பயணி அளித்த புகாரினைத் தொடர்ந்து கால் டாக்ஸி ஓட்டுநர் பிந்து யாதவ் தலைமறைவானர். இந்த நிலையில் அவர் பயன்படுத்திய தொலைபேசியை வைத்து தலைமறைவான பிந்து யாதவை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 354, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating