1425 லட்சம் நட்டம்: ஐமசுமு செயலாளர் மீது வழக்கு தொடர அமைச்சரவை அனுமதி!!
Read Time:1 Minute, 18 Second
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மீது வழக்கு பதிவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கடந்த தேர்தல் காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரச்சார நடவடிக்கைகளுக்கென இலங்கை போக்குவரத்து பஸ்களை பயன்படுத்தியது.
இதற்கான 1425 லட்சம் ரூபா கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அறிவித்தும் இன்னும் செலுத்தப்படவில்லை.
அதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக வழக்கு தொடர்வது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Average Rating