சீனா – இலங்கை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!!
Read Time:1 Minute, 8 Second
இலங்கை மற்றும் சீனாவிற்கிடையில் முழுமையான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
சீனாவின் சிரேஷ்ட கேர்ணல் லீ சொங்லின் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்து இது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் கரையொதுங்கிய இந்தியாவின் மீன்பிடி படகொன்றில் இருந்த நால்வரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த படகை திருத்தியமைப்பதற்கான உதவிகளை இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.
Average Rating