தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை!!
Read Time:1 Minute, 1 Second
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ. டபிள்யூ. ஜே. சி. டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றுக் கொள்வதற்காக சென்ற இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating