வில்கமுவ காட்டுப் பகுதியில் தீ!!
Read Time:55 Second
வில்கமுவ வஸ்கமுவ காட்டுப் பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது.
வில்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச செயலக காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த தீப்பரவலின் காரணமாக சுமார் 100 ஏக்கர் காட்டுப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வில்கமுவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating