பாதை ஓரத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு!!
Read Time:1 Minute, 6 Second
புத்தளம், பள்ளம நாகவில ஜயமாவத பாதைக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்றும் வெடிக்கக்கூடிய 20 தோட்டக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் இதை கண்டெடுத்துள்ளதுடன் அவை பொலிதீன் பை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து வெடிக்கக்கூடிய 20 தோட்டக்கள் மற்றும் ஒரு கைக்குண்டும் வைக்கப்பட்டிருந்த பொலிதீன் பையை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரிடம் கொடுத்துள்ளர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Average Rating