10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு முடிவு!!
Read Time:1 Minute, 0 Second
பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு முடிந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக பொறுப்பாளர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்னும் ஆறு தினங்களில் அனைத்து வாக்குச்சீட்டுகளும் அச்சிட்டு முடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 30 அங்குல நீலமான மட்டக்களப்பு மாவட்ட வாக்குச்சீட்டை இரண்டு பகுதிகளாக அச்சிட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
Average Rating