தாஜூடீனின் மரணம் விபத்தல்ல கொலை – நீதிமன்றத்தில் தெரிவிப்பு!!
Read Time:1 Minute, 12 Second
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது அல்ல, கொலை என இரகசிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த வழக்கில் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட வைத்தியர்களின் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் இது விபத்தல்ல கொலை என தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு குறித்த மேலதிக விசாணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிகாட்டியுள்ளனர்.
Average Rating