பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவருக்கு மீண்டும் விளக்கமறியலில்!!
Read Time:1 Minute, 18 Second
பாரத ரக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மூன்றாவது முக்கிய சந்தேகநபர் சமிந்த ரவி ஜயநாத், பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மாதாந்தம் இரகசிய பொலிஸில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் சந்தேகநபர் அந்த நிபந்தனையை மீறியதாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் பல தடவைகள் இரகசிய பொலிஸார் முன் ஆஜராகவில்லை என அவர் கூறினார்.
இந்த கருத்துகளை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன், சந்தேகநபரை ஓகஸ்ட் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Average Rating