மும்பைக்கு உதவ ஜெர்மனி தயார்: ஏஞ்சலா அறிவிப்பு

Read Time:1 Minute, 19 Second

மும்பையின் நகர்ப்புற பிரச்னைகளுக்கு ஜெர்மனி உதவ தயாராக உள்ளது,” என்று அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறினார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இரண்டு நாள் பயணமாக மும்பை வந்துள்ளார்.”திரிரத்னா பிரேர்ணா மண்டல்’ மற்றும் “வாட்டர் பிரண்ட்’ ஆகிய அமைப்புகள் மும்பை புறநகரில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மும்பையில் நடைபெற்று வரும் திட்டங்களுக்கு டட்ச் வங்கியின் சார்பில் நேற்று விருது வழங்கப்பட்டது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.நான்கு லட்சம் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஏஞ்சலா மெர்க்கல் பேசுகையில்,””மும்பை நகரம் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. மும்பை நகருக்கு தேவையான உதவிகளை செய்ய ஜெர்மனி தயாராக உள்ளது,” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மன்மோகனுடன் பெட்ரோலிய அமைச்சர் சந்திப்பு
Next post சிறையில் கைதிகள் தோண்டிய 40 அடி நீள சுரங்க வழி கண்டுபிடிப்பு