சிறையில் கைதிகள் தோண்டிய 40 அடி நீள சுரங்க வழி கண்டுபிடிப்பு

Read Time:4 Minute, 4 Second

மீரட் சிறையில், கைதிகள் தோண்டிய 40 அடி நீள சுரங்கவழி கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இன்னும் மூன்று அடி தோண்டியிருந்தால், 140 கைதிகள் கூண்டோடு ஓட்டம் பிடித்திருப்பர்! உ.பி., மாநிலம் மீரட்டில் உள்ள சிறையில் இந்த பயங்கரம் நடந்துள்ளது. சிறையில் 17, 18 வது பிரிவுகளில் மொத்தம் 140 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு தான் சுரங்கவழி தோண்டப்பட்டுள்ளது. சமீபத்தில், இரு அதிகாரிகளை, வார்டன் அழைத்துக் கொண்டு வழக்கமான ரோந்துப்பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது, இந்த பிரிவுகளில் நுழைந்தவுடன், அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு அதிகாரி தன் லத்தியை, தரையில் எதேச்சையாக இடித்தார்.ஏதோ ஒரு வித சத்தத்துடன், அந்த இடத்தில் பள்ளம் இருப்பது தெரிந்தது. பக்கத் தில் குப்பை தொட்டி இருந் தது. அதிகாரிக்கு ஏதோ மனதில் பொறி தெறிக்க, அந்த இடத்தை மீண்டும் லத்தியால் அடித்தார். அங்கிருந்து மண் விலக, பள்ளம் இன்னும் பெரிதானது.மீண்டும் மீண்டும் லத்தியால் குத்தினார் அதிகாரி. பள்ளம் பொத்துக்கொண்டு பூமிக்குள் மண் சரசரவென சரிந்தது. பூமிக்குள் பார்த் தால், பெரிய பள்ளம் தெரிந்தது.உடனே, சில போலீசாரை அழைத்து, பள்ளத்தை கடப் பாரையால் குத்தி தோண்டச் சொன்னார்.

தோண்டத் தோண்ட, பள்ளம் பெரிதாகிக் கொண்டே, கீழே பக்கவாட்டில் சென்றது.முழுமையாக தோண்டியவுடன் அதிகாரிகள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டனர். சிறையில், பத்தடி பள்ளத்தில், நாலரை அடி அகலத்துக்கு, ஒரு ஆள் தாராளமாக செல்லும் வகையில், 40 அடி நீளத்துக்கு சுரங்க வழி தோண்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.சிறையின் வெளிவாசல் சுவரை எட்ட, இன்னும் மூன்று அடி நீள சுரங்கம் தோண்டினால் போதும்.

அப்படி தோண்டியிருந்தால், இந்த இரு பிரிவுகளில் அடைக்கப்பட்டுள்ள 140 கைதிகள் கூண்டோடு ஓட்டம் பிடித்திருப்பர்.இந்த சுரங்க வழியில், சில இடங்களில் செங்கற்களை அடுக்கியும், “பக்கா’வாக அமைக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். பல நாளாக கைதிகள் பலரும் சேர்ந்து இந்த சுரங்க வழியை தோண்டியிருக்க வேண்டும்.இந்த சுரங்க வழி தோண்டியபோது கிடைத்த மண்ணை, கழிப்பறைகளில் கொட்டியுள்ளனர்.

அதுபோல, வேறு இடங்களில் கொட்டி, வெளியில் தெரியாதபடி சமப்படுத்தியுள்ளனர்.சுரங்கம் தோண்டவும், மண்ணை அப்பறப்படுத்தவும், கைதிகள் சாப்பாட்டு தட்டுகள், பக்கெட்கள், பெரிய கரண்டிகள் பயன் படுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், “பல நாளாக நடந்துள்ள இந்த சதி திட்டம், எப்படி போலீசுக்கு தெரியாமல் இருந்தது, போலீசும் உடந்தையாக இருந்ததா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மும்பைக்கு உதவ ஜெர்மனி தயார்: ஏஞ்சலா அறிவிப்பு
Next post மூன்று வயது குழந்தை கண் தானம் : இரண்டு குட்டீஸ்களுக்கு பார்வை