ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்
Read Time:1 Minute, 0 Second
புதுச்சேரி அரசு பஸ்சில் பெண் ணிற்கு குழந்தை பிறந்தது. முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் ஏசு. இவரது மனைவி நிர்மல் சுகந்தி (25). கர்ப்பிணி யான நிர்மல் சுகந்தி பிரசவத் திற்காக விழுப்புரம் போலாண் டிக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். பிரசவ வலி ஏற்படவே நிர்மல் சுகந்தியின் தாயார் அவரை புதுச்சேரிக்கு அரசு பஸ்சில் அழைத்து வந்தார். பஸ் மூலக்குளம் அருகே வந்த போது நிர்மல் சாந்திக்கு பிரசவ வலி அதிகமானது. உடன் பஸ்சில் பயணம் செய்த பெண்கள், ஆண்களை கீழே இறக்கி விட்டு பஸ்சிலேயே நிர்மல்சாந்திக்கு பிரசவம் பார்த் தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.