தந்தை பணம் தராததால் மகன் தீக்குளித்து பலி
Read Time:1 Minute, 5 Second
தந்தை பணம் தர மறுத் ததால் வாலிபர் தீக்குளித்து இறந்தார். முதலியார்பேட்டை நைனார்மண்டபம் வள்ளாலார் வீதியை சேர்ந்தவர் ஜெகநாத சுவாமி. இவரது மகன் ரமேஷ்சுவாமி(30). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் ஜெக நாத சுவாமியிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். வழக்கம் போல் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதற்கு ஜெகநாத சுவாமி மறுக்கவே, விரக்தியடைந்த ரமேஷ் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் ரமேஷை அரசு பொது மருத்துவனையில் சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.இது குறித்து முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.