கோவில் நகை திருடர்களை காட்டி கொடுத்த கேமரா
Read Time:1 Minute, 11 Second
டில்லி பாலாஜி கோவில் பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கடந்த வெள்ளியன்று அதிகாலை கொள்ளைக்கும்பல் புகுந்து, நகைகளைத் திருடியது. கோவிலில் கண் காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததால், கும்பலை காமிரா பதிவு செய்தது. இதே பகுதியில் ஆறு கோவில்களில் இந்த கும்பல் திருடியுள்ளது. கேமராவில் பதிவானவர்களைத் தேடும் பணியில் டில்லி போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். தொடர் திருட்டுக்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, கேமரா தடயம் மிகவும் உதவும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.திருடர்கள் எப்படியெல்லாம் கோவில் நகையை அபகரித்தனர் என்ற விவரம் முழுவதுமாக கேமராவில் பதிவாகியுள்ளது. திருடர்கள் வாயில் துணியைக் கட்டியுள்ளனர்.