கொய்யாப்பழம் பறித்த சிறுவனை கட்டி வைத்து உதைத்த வீட்டு உரிமையாளர் கைது!!
Read Time:1 Minute, 2 Second
மடிப்பாக்கத்தை அடுத்த உள்ளகரத்தை சேர்ந்தவர் ரகுபாலன். இவரது மகன் அருள்ராஜ் (9). இன்று காலை அவன் நேரு காலனியில் உள்ள சோம்கா டோல்டா என்பவரது வீட்டில் உள்ள கொய்யா மரத்தில் பழம் பறித்தான்.
சோம்கா டோல்டா அதை பார்த்து விட்டார். உடனே சிறுவன் அருள் ராஜை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக தெரிகிறது.
வலி தாங்க முடியாமல் சிறுவன் அருள்ராஜ் அலறி துடித்தான். இதைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு வந்த போலீசார் அருள்ராஜை விடுவித்தனர். அவனை கட்டி வைத்து உதைத்த வீட்டு உரிமையாளர் சோம்கா டோல்டாவை கைது செய்தனர்.
Average Rating