மருத்துவமனையில் அனுமதி மறுத்ததால் வாசலில் பிரசவித்த இளம்பெண்!!
பிரசவ வலியுடன் வந்த இளம்பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர் மருத்துவமனையின் கேட் அருகிலேயே பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை குல்ஷன் என்ற 20 வயது பெண் பிரசவ வலியுடம் புத்தானா என்ற சிறுநகரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் அந்த பெண் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி உள்ளே விட மறுத்துள்ளனர் ஊழியர்கள். இதனால் அந்த பெண் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கேட் அருகிலேயே பிரசவிக்க வேண்டியதாகிவிட்டது.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவருக்கு அங்கேயே மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிரசவ வலியிடன் வந்த பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating