முன்னணி டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் திடீர் ஓய்வு!!
முன்னணி டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் (27), நேற்று முன்தினம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விம்பிள்டன் போட்டியின்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக, தனியார் நிறுவனம் நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியானது. மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. எனினும், தான் ஒருபோதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதில்லை என்றும், இந்த குற்றச்சாட்டுக்கு எதிராகப் போராடப் போவதில்லை என்றும் ஹிங்கிஸ் தெரிவித்துள்ளார். மேலும், ‘எனது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ என்று அவர் கூறியுள்ளார். ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஹிங்கிஸ், ஆஸ்திரேலிய ஓபனில் ஹாட்ரிக் (1997&99) சாதனை படைத்துள்ளார். குதிரையில் இருந்து கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்த அவர், நான்கு ஆண்டு ஓய்வுக்குப் பிறகு 2005ம் ஆண்டு மீண்டும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.