ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!!

Read Time:1 Minute, 42 Second

2038957794matchஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் அஹமட் செசாட், சொயிப் மலிக், உம்ரக் அக்மல் ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் திசர பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 176 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சில்வா 31, சிறிவர்த்தன 35, கப்புகெதர 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பாகிஸ்தான் சார்பில் சொஹைல் தன்விர் 3 விக்கெட்களையும் அன்வர் அலி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக சொஹைல் தன்விர் தெரிவு செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 176!!
Next post முப்படையினரின் ஓய்வூதிய திருத்தம் மஹிந்தவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது – பிரதமர்!!