இராணுவ வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பேன்!!
Read Time:1 Minute, 25 Second
இராணுவ வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து பெற்றுத் தந்த சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த இராணுவ வீரர்களின் ஆசைப்படி தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை நாட்டினுள் ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் அமைதியான நாடொன்றை உருவாக்குவதற்காக அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
2014 ம் ஆண்டு புலமைப்ப பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாதுகாப்பு படையினரின் பிள்ளைகளுக்கு புலமபை்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு பாதுகாப்பு சேவை வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
Average Rating