உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்!!
உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் உள்ள போஜா கிராமத்தைச் சேர்ந்தவர் தீப்பி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இயற்கை உபாதையை கழிக்க அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளார்.
நீண்ட நேரமாகியும் தீப்தி வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வயல்வெளியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தீப்தி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போஜா கிராமத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அக்கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating