ஓடும் விமானத்தில் இந்திய தொழிலாளர் மரணம்

Read Time:1 Minute, 40 Second

ani_flight.gifஜெட்டாவிலிருந்து ரியாத் வழியாக மும்பைக்குச் சென்ற விமானத்தில் பயணித்த இந்திய தொழிலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார். கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் அப்துல்லா மொஹைதீன் (45) என்பவர், ஜெட்டாவிலிருந்து ரியாத் வழியாக மும்பை செல்லும் செளதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். விமானம் பறந்து கொண்டிருந்தபோது அப்துல்லா நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ரியாத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அப்துல்லா இறந்து விட்டதாக தெரிவித்தனர். யான்பு நகரில் எரிவாயு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் அப்துல்லா. அவரது மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரணமடைந்த அப்துல்லாவுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். விடுமுறைக்காக அவர் இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது உடல் ரியாத் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் சவூதியில்தான் இருக்கிறார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனைவியைப் பயன்படுத்தி தூத்துக்குடி ரவுடி நூதன கொள்ளை
Next post அதிபர் முஷரப் அதிரடி நடவடிக்கை; பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம்; சுப்ரீம் கோர்ட்டை ராணுவம் கைப்பற்றியது