நாளை தபால் மூல வாக்களிப்பு!!
Read Time:1 Minute, 21 Second
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஷேட குழுவொன்றை அனுப்பி வைக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை இடம்பெறவுள்ளதோடு எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளையதினம் கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக எம்.எம்.மொஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினமாக இன்று செயற்படுத்தப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 30ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 10ம் திகதி வரை இடம்பெறும் என, தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார்.
Average Rating