இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நாணயத்தாள்களை கடத்தும் அறுவர் கைது!!

Read Time:1 Minute, 43 Second

9574254601இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போலி நாணயத்தாள்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் பகுதியில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சந்தேகநபர்கள் இலங்கையில் இருந்து போலி இந்திய நாணயத்தாள்களை அந்த நாட்டுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதாகவும் இதில் 16 பேர் அடங்கிய குழுவொன்று தொடர்புபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்கள் வசமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் (இந்திய ரூபாய்) 42 கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை குறித்த நாணயத்தாள்கள் பாகிஸ்தானில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களால் இதுவரை ஆறு இலட்சம் இந்திய ரூபாய்கள் இவ்வாறு இலங்கையில் இருந்து அந்த நாட்டுக்கு கொண்டு சென்று விநியோகிப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்திரிக்கா எப்போதும் நல்லவர்களுடனேயே இருப்பவர்!!
Next post காத்தான்குடியில் கொள்ளையிட்ட இரு மாணவர்கள் கைது!!