தென்னை மரத்தில் அபாரமாக ஏறி அசத்தும் கேரள சிறுமி

Read Time:1 Minute, 26 Second

pi05.jpgநொடிப்பொழுதில் தென்னை மரம் ஏறி தேங்காய் பறித்து கேரள சிறுமி அசத்துகிறார். தென்னை மரம் ஏற ஆட்கள் கிடைப்பது இல்லை என்ற புலம்பல் தென்னை விவசாயிகளிடம் அதிகரித்துள்ளது. இந்த புலம்பலுக்கு இடையே எவ்வளவு பெரிய தென்னை மரம் என்றாலும் பயமில்லாமல் அதிவேகமாக ஏறி அசர வைக்கிறார் ஒன்பது வயது சிறுமி.இவரது பெயர் அஞ்சனா. நான்காம் வகுப்பு படிக்கிறார். கோழிக்கோடு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளி வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு வருகிறார். உடனடியாக தென்னை மரம் ஏறுவதற்கான கிளைம்பர் இயந்திரத்துடன் புறப்பட்டு விடுகிறார். விளையாட்டுத்தனமாக மரம் ஏறக் கற்றுக் கொண்டவர் இப்போது அதிவேகமாக மரம் ஏறி தேங்காய் பறித்து அசத்துகிறார். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. மரம் ஏறும் வித்தையைக் கற்றுக் கொடுத்த குரு இவரது தந்தை ரமேசன். வகுப்பு முடிந்ததும், அப்பாவுக்கு உதவுகிறார் இந்த சுறுசுறுப்பு சிறுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை ஈராக்கில் அதிகரிப்பு
Next post பஸ் பின் சக்கரம் கழன்று ஓடியது – பயணிகள் தப்பினர்