பாலக்காடு: 10–ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பலி!!

Read Time:1 Minute, 8 Second

b155ea92-43e3-4a6f-80ff-649077fa59c8_S_secvpfகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமுடியூரை சேர்ந்தவர் நவ்சாத். இவரது மகள் நவ்சிகா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று நவ்சிகா அருகில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றார். அங்கு சித்தி வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் கிரில் கேட்டை தொட்டபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட நவ்சிகா படுகாயம் அடைந்தார்.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நவ்சிகாவை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவ்சிகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சூர் அருகே பெற்றோருடன் பஸ்சில் சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்: கண்டக்டர் கைது!!
Next post திருந்தாத டெல்லி: தாய்க்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!