கருணாஅம்மான் லண்டனில் கைது
Read Time:48 Second
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாம்மான்) நேற்று மத்திய லண்டனில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என லண்டனில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன போலி பாஸ்போட்டுடன் நடமாடியமைக்காக இவரும் மற்றும் இவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டனர் என்பதை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியது என ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. அவர் விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.