ஆயுதங்களுடன் டிபென்டரில் பயணித்த அறுவர் கைது!!
Read Time:1 Minute, 3 Second
மாளிகாவத்தை இந்ரம் சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் ராகம, அங்குருவாதொட்ட, நாகொல்லாகம, காலி, மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating