உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!
Read Time:1 Minute, 13 Second
உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவையின் தேவை நிமித்தம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எம்.தசநாயக்க தங்காலை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான கே.ஜீ.பி.புத்திக சமரபால தேசிய பொலிஸ் வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் கட்டளையிடும் மற்றும் தகவல் வழங்கும் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்ட டி.எம்.ஜே.பி தசநாயக்க நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating