இதுவரை 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன!!
Read Time:1 Minute, 19 Second
இந்த முறைப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை விநியோகம் செய்து முடித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்டுக்களையும் விநியோகம் செய்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கும் விஷேட தினமாக பெயரிடப்பாட்டுள்ளது.
இதுதவிர ஏனைய அரச அதிகாரிகள் நாளை மற்றும் நளை மறுதினம் தமது தபால் மூல வாக்குப் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தமது வாக்குப் பதிவுகளை எதிர்வரும் 8ம் திகதி மேற்கொள்ள முடியம் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Average Rating