பாலியல் குற்றச்சாட்டில் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கு 12 வருட சிறை!!
படுவஸ்நுவர பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் சந்தன கருசிங்கவிற்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வல்லுறவு சம்பவம் ஒன்றிற்காகவே இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளதாக எமது அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் எச் குலதுங்கவினால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினருக்கு 12 வருட கால கடூழிய சிறை தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
47 வயதுடைய ஹெட்டிபொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரதேச சபையின் உறுப்பினருக்கே இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
20 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 2008ம் ஆண்டு இவருக்கு எதிராக குளியாப்பிட்டிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
Average Rating