அதி சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் கொள்ளை – நால்வர் கைது!!

Read Time:1 Minute, 46 Second

1928637967Untitled-1இராவணா எல்ல பிரதேசத்தில் வெடி மருந்துகளுடன் கைதான சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் படி மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெடி மருந்துகளை கொண்டு செல்ல சந்தேகநபர்கள் உதவி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் மூவரும் ரன்தெனிய மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இராவணஎல்ல பகுதியில் வைத்து பஸ் ஒன்றை சோதனையிட்ட பொலிஸார் அதிலிருந்து 50 கிலோ கிராம் நிறையுடைய அதி சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை மீட்டனர்.

அத்தோடு சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்தனர்.

உமாஓய அபிவிருத்தி திட்டத்தில் கரதகொல்ல பிரதேசத்திலுள்ள தளத்தில் இருந்து குறித்த வெடி மருந்துகள் கொள்ளையிடப்பட்டு, வீரகெட்டிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் நால்வரையும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை!!
Next post மஹிந்தவுக்கு சேறுபூசும் வகையில் கையேடு – அச்சகம் சுற்றிவளைப்பு!!