கொட்டாஞ்சேனையில் ஒருவர் வெட்டிக் கொலை!!
Read Time:1 Minute, 3 Second
கொட்டாஞ்சேனை – ஜம்படா வீதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த நால்வரே இதனைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை குறித்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் கொலையானவர் ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
Average Rating