ஷில்லாங்கில் விசாரணைக் கைதி தூக்கு போட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 16 Second
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேகாலயா மாநிலம் ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஜவாய் காவல் நிலையத்தில் லியோபஸ்(32) என்பவர் விசாரணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். திருட்டு வழக்கில் சிக்கிய அவரை போலீசார் கடந்த ஜூலை 30 ஆம் தேதி கைது செய்திருந்தனர். காவல் நி்லையத்தில் வைத்து லியோபஸை போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த லியோபஸ் நேற்று இரவு தனது உள்ளாடை மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல் நிலையத்தில் கைதி தற்கொலை செய்து கொண்டது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating