கந்தளாய் பிரதேசத்தில் போலியான வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது!!
கந்தளாய் பிரதேசத்தில் ஒரு தொகை சட்டவிரோதமான வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் கடிகார கோபுர சந்திக்கு அருகில் உள்ள ஒரு வியாபார நிலையத்தில் இருந்து இந்த போலியான வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக விநியோகிக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டுக்களைப் போலவே அச்சிடப்பட்ட, 14,986 போலியான வாக்குச் சீட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாடகை செலுத்தக் கூடிய வியாபார நிலையம் ஒன்றிலிருந்தே மேற்படி போலி வாக்குச்சீட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Average Rating