மொரட்டுவ – கொழும்பு தனியாஸ் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
Read Time:1 Minute, 10 Second
மொரட்டுவ – கொழும்பு தனியாஸ் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் தொடர்வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தூர சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்து பஸ் தரிப்பிடங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இப்பிரச்சினைக்கு உடன் தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுப்பதாகவும் இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
Average Rating